ஞாயிறு, 19 ஜூன், 2016

அவள் எங்கே?



மேகங்கள் நீர்த்து போகும்
சூரியனும் வேர்த்து போகும்
முழு நிலவும் மறைந்து போகும்
அவள் இதழோரப் புன்னகையை கண்டு

மலையோரம் நீண்ட ராகம்
கருங்குயிலின் இனிய கானம்
வாரங்கள் ஆன போதும்
இசைக்கின்றது என்செவியின் ஓரம்

மாதங்கள் போன பிறகு
தனியாக விரிந்ததென் சிறகு
வழி நெடுக நடந்து பார்த்தேன்
பழைய கானங்களை தேடி தீர்த்தேன்

ராகங்கள் நீளவில்லை
கானங்களை காணவில்லை
வாரங்கள் தோரும்
வற்றாத ஊத்தாக
இசைத்து நின்ற
கருங்குயிலும் பாடவில்லை

காரணங்களை தேடி அலைந்தேன்
கானகுயிலை பாட அழைத்தேன்

தழுதழுத்த குரலில் 
கோவமாய் கேட்டது
உன்னோடு எப்பொழுதும் வருவாளே
"அவள் எங்கே" என்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக