ஞாயிறு, 17 ஜூலை, 2016

பெண் பார்க்கும் படலம்:-


(வேலை பார்க்கும் ஊரில் இருந்து பாட்டு கேட்டுகொண்டே சொந்த ஊர் பயணம், தூக்கத்திற்காக ஏங்கி பின் தள்ளாடும் நடையோடு பெண் பார்க்க சென்று பின் அவளை பிடித்ததும்)

வழி நெடுக வேடிக்கை
பயணம்
மாதம்தோறும் இனிக்கின்ற
தருணம்

இசை கேட்டு ஓயாத
செவிகள்
பிறர்பாட மனதில் ஓடும்
கவிகள்

தாமதமாய் வந்து சேரும்
தூக்கம்
இன்றேனும் கிடைக்குமோ என்ற
ஏக்கம்

வந்திறங்கிய வாசலினின்று
பெண்பார்க்க போகிறோமெண்று
சொன்னவர்கள் சோர்ந்துபோக
சிரித்தேன் கேலியாக

இருளோடு ஒளி சேரும்
நேரம்
தீரவில்லை இரு இமையின்
பாரம்

முகம் துடைத்து
அடி வைத்து
நகராத கால்களோடு
ஓயாமல் அடம்பிடித்து
பேருந்தில் பயணம் ஆனேன்
என் மறுபாதி தேடபோனேன்

கேள்விக்கு விடையாக
மௌனத்தின் மொழியாக
பார்வையால் அளவெடுத்தாள்
இந்த ஊமைக்கும்
மொழி கொடுத்தாள்

கள்ளம் அற்ற
அவள் பேச்சு
கிராமத்து வழக்கோடு
கலந்தமைந்த சொல்வீச்சு

புன்னகையில் மருந்து வைத்தாள்
என் நினைவில் கலந்துவிட்டாள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக