புதன், 29 ஜூன், 2016

வாழ்வியல்:-


துள்ளி துள்ளி வந்த முயல்
விழுந்த இடம் பச்சை வயல்
தாவி தாவி ஓடும் கயல்
காட்சி யாவும் இறைவன் செயல்

ஓடி ஓடி கனத்த கால்கள்
களித்த பொழுது விழுந்த பாக்கள்
ஆடி ஆடி சோர்ந்த நாட்கள்
அமிர்த மென்ன்றே சொல்வார்கள்

வந்து வந்து போன இடம்
தங்கும் போது  சொந்த மடம்
உண்டு உண்டு வளர்த்த கடம்
யாரை நம்பி இந்த சடம்

வேண்டும் வேண்டும் என்று சொல்லி
கற்ற இடம் சேர்ந்த பள்ளி
வாரி வாரி கொடுத்த கள்ளி
நேரம் வந்தாள் முற்று புள்ளி.

சனி, 25 ஜூன், 2016

ஏழையின் கனவு : -





இமை இறங்கும் நேரம்
என் விழியின் ஓரம்
மெதுவாக எட்டிப் பார்த்தாள்
இரு கண்களோடு வேர்த்தாள்

காற்றென்னைத் தீண்ட
அவள் கைகளாய் ஆனது
கண்ணீரும் காய்ந்தது

அவள் நினைவுகளோடு
என் உடலும் சாய்ந்தது

விழி சாமரங்கள் சேர
எனக்குள் அவளைத் தேட
காணவில்லை அந்த வெள்ளி நிலவு
ஆதலால்
இன்னமும் தீரவில்லை
இந்த ஏழையின் கனவு.

கானல் நீர்:-



இதயத்திலே தேடினேன் அமைதியை
திடுமென நெஞ்சுக்குள் குதித்தாள்
என் இதயம் உடைய

வெள்ளி, 24 ஜூன், 2016

தேவதையின் சாபம் :-



என் விழியில் மின்னல்
மேகமாய் அவள் கூந்தல் உரச - என்
இதயத்திலே இடி

காதல் இவள் உருவத்திலா?
இல்லை பருவதில்லா?
அல்லது
இவள் புன்னகையிலா?

விதையாக நுழைந்தாள்
விழுதுகளாய் எழுந்தாள்
வேர்களை பிடித்தேன்
வெட்டிவிட துடித்தேன்
நிழலோடு வாழ
நிஜங்களை துடைத்தேன்

என் இதயத்தில் கீறல்கள்
வழிந்தன காதலின் சாரல்கள்
வெகு அருகில் வந்தாள்
எனை பருகி நின்றாள்

சிலையான என்னை
சிரிப்போடு சிதைத்து
என் இதயத்தை உதைத்து
விளையாடிப் போனாள்
என் உயிரைக் களவாடிப் போனாள்

நடைபிணமாய் நானும்
நடைபயில வேண்டும்
என்று அவளிட்ட சாபம்
இன்னமும் தீரவில்லை
அந்த தேவதையின் கோபம்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

அவள் எங்கே?



மேகங்கள் நீர்த்து போகும்
சூரியனும் வேர்த்து போகும்
முழு நிலவும் மறைந்து போகும்
அவள் இதழோரப் புன்னகையை கண்டு

மலையோரம் நீண்ட ராகம்
கருங்குயிலின் இனிய கானம்
வாரங்கள் ஆன போதும்
இசைக்கின்றது என்செவியின் ஓரம்

மாதங்கள் போன பிறகு
தனியாக விரிந்ததென் சிறகு
வழி நெடுக நடந்து பார்த்தேன்
பழைய கானங்களை தேடி தீர்த்தேன்

ராகங்கள் நீளவில்லை
கானங்களை காணவில்லை
வாரங்கள் தோரும்
வற்றாத ஊத்தாக
இசைத்து நின்ற
கருங்குயிலும் பாடவில்லை

காரணங்களை தேடி அலைந்தேன்
கானகுயிலை பாட அழைத்தேன்

தழுதழுத்த குரலில் 
கோவமாய் கேட்டது
உன்னோடு எப்பொழுதும் வருவாளே
"அவள் எங்கே" என்று?

வியாழன், 16 ஜூன், 2016

குறும்பு:

அவள் கருவிழி இரண்டும்
விடுதலை வேண்டும் என்று
இமையோரம் சண்டை போட!

எனை கண்டும் காணானது போல்
எதையோ தேட!

தேடவேண்டாம்
உன் இதயம் எனக்குள்ளே என்றேன்!
பதிலுக்கு சொன்னாள்
நான் தேடுவது உங்களுடையதை என்று.