வெள்ளி, 24 ஜூன், 2016

தேவதையின் சாபம் :-



என் விழியில் மின்னல்
மேகமாய் அவள் கூந்தல் உரச - என்
இதயத்திலே இடி

காதல் இவள் உருவத்திலா?
இல்லை பருவதில்லா?
அல்லது
இவள் புன்னகையிலா?

விதையாக நுழைந்தாள்
விழுதுகளாய் எழுந்தாள்
வேர்களை பிடித்தேன்
வெட்டிவிட துடித்தேன்
நிழலோடு வாழ
நிஜங்களை துடைத்தேன்

என் இதயத்தில் கீறல்கள்
வழிந்தன காதலின் சாரல்கள்
வெகு அருகில் வந்தாள்
எனை பருகி நின்றாள்

சிலையான என்னை
சிரிப்போடு சிதைத்து
என் இதயத்தை உதைத்து
விளையாடிப் போனாள்
என் உயிரைக் களவாடிப் போனாள்

நடைபிணமாய் நானும்
நடைபயில வேண்டும்
என்று அவளிட்ட சாபம்
இன்னமும் தீரவில்லை
அந்த தேவதையின் கோபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக