சனி, 3 செப்டம்பர், 2016

குங்பூ - உடலினை உறுதி செய் :-



3) ஷாவ்ளின் குங்பூ கதைகள் (மீண்டும் மீண்டும் பயிற்சி செய்) :





            ஒருவன் தான் குங்பூ கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசிரியரை நாடினான். அவர் அவன் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை. அவன் அந்த ஆசிரியரை தொந்தரவு செய்து  கொண்டே இருந்தான்.

உடனே ஒரு கட்டத்தில் ஆசிரியர் அவனை சென்று ஒரு மரத்தை காண்பித்து அதை பிடுங்குமாறு கூறினார். அவன் அந்த செயலை முடித்தவுடன் அவனுக்கு குங்பூ கற்றுத்தருவதாக கூறினார். அவனும் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் மரத்தை பிடுங்குவதையே தொடர்ந்து முயன்றுகொண்டிருதான்.





     அந்த ஆசிரியரின் மாணவர்கள் அவனை கேலிசெய்தனர். அவன் அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் மரத்தை பிடுங்குவதிலேயே கவனம் செலுத்தினான். ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி விட்டான்.

அதை அந்த ஆசிரியரிடம் வந்து கூறி தனக்கு குங்பூ கற்றுத்தருமாறு வேண்டினான்.

அந்த ஆசிரியரின் மாணவர்கள் அவனை நம்பாமல் அந்த இடத்தை பார்வையிட்டு வந்து தாங்கள் கண்டதை ஆசரியரிடம் கூறினர். அவர் தன்னை தொந்தரவு செய்தவனிடம் சென்று, இனி அவன் குங்பூ கற்றுக்கொள்ள தேவையில்லை என்று கூறி அனுப்பிவிட்டார். பின்னர் அவரது மாணவர்களிடம் அவன் குங்பூவில் உயரியதான சீ குங் (Chi-Kung or Qi- qong) கலையில் அதிஉன்னத நிலையை அடைந்து விட்டதாக கூறினார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.


தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -குறள்-619

தெய்வத்தின் துணைக் கொண்டும் ஒரு செயலில் வெற்றிபெற முடியாத நிலை இருந்தபோதிலும் ஒருவன் தன உடலை வருத்தி உழைத்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்


குங்பூவிற்கு இது மிகவும் பொருந்தும்.

அடுத்த பதிவிலுருந்து பயிற்சிகள் ஆரம்பம். உடலினை உறுதிசெய்ய தயாராய் இருங்கள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக