வியாழன், 1 டிசம்பர், 2016

வீருகொண்டெழு

வரி புலியே 
உன் வீரம் எங்கே
வீழ்ந் தாலும்
உன் சீற்றம் எங்கே

வேட்டையாடி பழக்கம் இல்லையே
வெறுங்கதைகள் நமக்கும் இல்லையே

முன்பொரு காலத்தில்
என தொடங்கும் வேகத்தில்
சிரிப்போசை கேட்க வில்லையா
கேட்டும் நீ நிறுத்த வில்லையா

குனிய குனிய குட்டு கின்றான்
எழுத்த்து நிற்கும் தெம்பு எங்கே
குனிந்து குனிந்து பழகியதால்
முதுகெலும்பு  நிமிர்வ  தெங்கே

வரலாறு நமக்கெதுக்கு
வீண் கதைகள் பேசுவதற்கு
முதுகெலும்பை நீ  நிமிர்த்து
உன் பழைய வரலாறை துடைத்து

வித்தாக புதைந்து விட்டாய்
ஒரு நாள் வளர்வோம் என நினைத்து
மழையில்லா காலமிது
உள் உஷ்ணத்தால் வளர்த்து
உன் மனச்சிறையை உடைத்து.