புதன், 31 அக்டோபர், 2018

போர் ஆமா Pour













கார்மேகம் சூளுதடி
நீலவானம் மாறுதடி
புகையான தண்ணீரும்
பன்னீராய் தெளிக்குதடி

மழைச்சாரல் வீசுதடி
மௌனமொழி பேசுதடி
உணர்வுகள் ஒன்றுபட
புன்னகையாய் பூக்குதடி

சூடான தண்ணீரும்
சுகமாய் மெல்லிசையும்
ஜன்னல் வழி பார்வையிலே
நீர்தெளித்து விளையாடும்

காட்சிகள் உருண்டோடும்
மண்வாசம் மனம்கவிழும்
எறும்புகளும் உணவோடு
மேல்நோக்கி கவிழ்ந்தோடும்

இமைமூடா கண்ணுறக்கம்
தன் நிலை மறந்து
தேங்கிநிற்கும்
நினைவுகளின் பதிவிறக்கம்
என் நிலை மறந்து
போர் தொடுக்கும்.


1 கருத்து: